மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் காட்சியகங்களில் நின்று கொண்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை வழங்குவது கட்டாயமாகும்.
இது தனியார் துறை விவகாரங்களில் அரசின் நேரடித் தலையீடு ஆகும்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டம், 1947 என்ற ஒரு சட்டத்தைத் திருத்துவதற்காக தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களால் இதற்காக ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் கேரளாவில் தொடங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ஊழியர்களுக்கான இருக்கை வசதிகளை வழங்கிடுவதற்கான ஒரு திட்டத்தை மாநிலத்தின் தொழிலாளர் ஆலோசனைக் குழு ஒருமனதாக அங்கீகரித்தது.