TNPSC Thervupettagam

தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கான திருவிழா

March 21 , 2018 2311 days 771 0
  • தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கானத் திருவிழாவை (Festival of Innovation and Entrepreneurship -FINE) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புது தில்லியில் தொடங்கி வைத்துள்ளார்.

  • இந்திய தேசியப் புத்தாக்க அறக்கட்டளை (National Innovation Foundation-India-NIFI) மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையோடு (Department of Science and Technology - DST) இணைந்து ராஷ்டிரபதி பவன் இந்த 5 நாள் திருவிழாவை நடத்தியுள்ளது.
  • இத்திருவிழாவின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்திய இளம் தொழில்நுட்பப் புத்தாக்க விருதுகளை (Gandhian Young Technological Innovation Awards) வழங்கினார்.
  • புத்தாக்கவியலாளர்களுக்கு (innovators) ஓர் ஆதரவு சூழலமைப்பை உருவாக்கி அதனை வளர்ப்பதற்காகவும்  அவர்களுடைய புத்தாக்கங்களை  (Innovation) அங்கீகரிப்பதற்காகவும்,  அவற்றிற்கு மரியாதை வழங்குவதற்காகவும், அவற்றினைக் காட்சிப்படுத்தி அவற்றிற்கு வெகுமதியளிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் தொடக்கமே  தொழில் முனைவு  மற்றும் புத்தாக்கத்திற்கான திருவிழாவாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்