மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை ‘நீலம்’ என்ற புதியதொரு நிற வகைப்பாட்டுடன், தொழில்துறைகளின் திருத்தப் பட்ட வகைப்பாட்டை ஏற்க உத்தரவிட்டுள்ளது.
அவை கழிவு நிரப்பு நிலப்பரப்புகளைப் பராமரிப்பது அல்லது உயிரி முறைக் கழிவுப் பிரித்தெடுப்பு ஆகியவற்றில் ஈடுபடுவது போன்ற "மிக அத்தியாவசியச் சுற்றுச்சூழல் சேவைகள்" என்று அழைக்கப்படுகின்றன.
"நீல வகைத் துறை" என்பது தொழில்துறைகள் மேலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான செயல்படுவதற்கான ஒப்புதலாகும்.
திருத்தப்பட்ட ஒரு முறையின்படி, மாசுக் குறியீட்டின் பின்வரும் வரம்புகளின் மீதான அடிப்படையில் தொழில் துறையின் வகையானது தீர்மானிக்கப்படுகிறது : சிவப்பு: மாசுபாட்டுக் குறியீடு-PI> 80; ஆரஞ்சு: 55≤PI<80; பச்சை: 25
வெள்ளை வகைத் தொழில்துறைகள் குறைந்தபட்ச மாசுபாட்டுத் திறன் கொண்டவை என வரையறுக்கப்படுகின்றன.
மாசுபடுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு தொழில்துறைகளை மறுவகைப் படுத்துவதற்காக CPCB ஆனது 2016 ஆம் ஆண்டில் இந்த வகைப்பாட்டை அறிமுகப் படுத்தியது.