TNPSC Thervupettagam

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய அறிக்கை 2023

March 30 , 2023 477 days 275 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான மாநாட்டு அமைப்பினால் (UNCTAD) வெளியிடப்பட்டது.
  • வளர்ந்து வரும் நாடுகளை விட வளர்ச்சி பெற்ற நாடுகள் இந்தப் பசுமைத் தொழில் நுட்பங்களால் அதிகம் பயனடைகின்றன என்பதோடு இது உலகப் பொருளாதாரச் சமத்துவமின்மையை இன்னும் ஆழமாக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிலிருந்த பசுமைத் தொழில் நுட்பங்களின் சந்தை மதிப்பு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 9.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளச் சந்தையாக மாறும்.
  • இந்த ஆண்டு அறிக்கையில் 'எல்லைப்புற தொழில்நுட்பத் தயார்நிலைக் குறியீடு' சேர்க்கப் பட்டுள்ளது.
  • இதன்படி, தொடர்ச் சங்கிலித் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் மற்றும் சூரிய சக்தி போன்ற முன்னிலைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் சில வளர்ந்து வரும் நாடுகளுக்கு மட்டுமே உள்ளது.
  • இதில் அதிக வருமானம் கொண்ட பொருளாதாரம் கொண்ட, குறிப்பாக அமெரிக்கா, சுவீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
  • இதில் குறிப்பிடத்தக்க வகையில் பிரேசில் - 40வது இடத்திலும், ரஷ்யக் கூட்டமைப்பு 31வது இடத்திலும், இந்தியா 46வது இடத்திலும், சீனா 35வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 56வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்