சமீபத்தில் அரசானது, 11வது நூற்றாண்டைச் சேர்ந்த தோமர் வம்ச அரசரான இரண்டாம் அனங்கபாலரின் மரபினை பிரபலப்படுத்துவதற்காக ஒரு குழுவினை அமைத்து உள்ளது.
இரண்டாம் அனங்கபாலர் அவர்கள் தோமர் வம்சத்தினைச் சேர்ந்தவராவார்.
அவ்வம்சத்தினர் 8 ஆம் நூற்றாண்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலங்களில் தற்போதைய தில்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆட்சி செய்தனர்.
இரண்டாம் அனங்கபால தோமரை அடுத்து அவரது பேரன் பிரித்திவிராஜ் சௌகான் அரியணை ஏறினார்.
சௌகான் தரைன் போரில் (தற்போதைய ஹரியானா) குரித் படைகளை (Ghurid forces) தோற்கடித்தார்.
அப்போருக்குப் பிறகு 1192 ஆம் ஆண்டில் டெல்லி சுல்தானியமானது நிறுவப் பட்டது.
8 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் அனங்க பாலரின் ஆட்சியின் போது தோமர் வம்சம் தனது தலைநகரைத் தில்லிகாபுரிக்கு (தில்லி) மாற்றியது.
இவரே டெல்லி எனும் அதன் தற்போதைய பெயரை அதற்கு வழங்கியவராவார்.