TNPSC Thervupettagam

தோள் சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு

March 10 , 2023 499 days 354 0
  • கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவிலில் மார்ச் 06 ஆம் தேதியன்று, தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் ஒன்று கூடி தோள் சீலைப் போராட்டம் அல்லது மாரு மரக்கால் சமரத்தின் 200வது ஆண்டு நிறைவு நினைவு விழாவினை நடத்தினர்.
  • இது பழைய திருவிதாங்கூரில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மேல் உடலை மறைக்கும் வகையில் சேலை அணிவதற்கான உரிமையினைப் பெறுவதற்காக பல தசாப்தங்களாக நடத்திய ஒரு போராட்டமாகும்.
  • திருவிதாங்கூர் என்பது இன்றைய தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
  • 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்புப் பகுதியினை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவதற்கான உரிமையானது மேல் சாதிப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது.
  • 1812 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் மகாராணி அவர்கள், கிறித்தவச் சமயத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மேலாடை (ரவிக்கை) அணிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
  • சமூக சீர்திருத்தவாதி அய்யா வைகுண்ட சுவாமி அவர்கள், பெண்களை ஒன்று திரட்டி அவர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான கூட்டங்களை நடத்தி உரிமை கோரல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மேலாடை கிளர்ச்சியின் முதல் கட்டமானது 1822-1823 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.
  • இந்தக் கிளர்ச்சியின் இரண்டாம் கட்டமானது 1827-1829 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.
  • 1958-1859 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட கிளர்ச்சியின் போது தான், வகுப்பு, சாதி மற்றும் மதம் என பாராமல் அனைத்துப் பிரிவு பெண்களும் மேல் ஆடை அணியலாம் என  அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்