TNPSC Thervupettagam

நகோபா ஜடாரா 2025 - தெலுங்கானா

February 14 , 2025 9 days 57 0
  • தெலுங்கானாவின் இந்தர்வெல்லி மண்டலத்தில் உள்ள கெஸ்லாப்பூர் கிராமத்தில் 'நகோபா ஜடாரா' கொண்டாடப்படுகிறது.
  • இது ராஜ் கோண்ட் மற்றும் பிரதான் இனப் பழங்குடியினரின் மெஸ்ராம் குலத்தின் போய்குட்டா கிளையின் புகழ்பெற்ற வருடாந்திரப் பழங்குடியின திருவிழா ஆகும்.
  • இது தெலுங்கானா மாநிலத்தின் சம்மக்கா சரலம்மா ஜடாராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரியப் பழங்குடியின விழாவாகும்.
  • கோண்ட் பழங்குடியினர் உலகின் மிகப்பெரிய பழங்குடியினக் குழுக்களில் ஒன்று என்பதோடு, இது நான்கு பழங்குடியினப் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பிரதான் குழுவினர் கோண்ட் பழங்குடியினரின் உட்கிளையாகக் கருதப்படுகிறார்கள்.
  • அவர்கள் கோண்ட் இனப் பிரிவினருக்கு வேண்டி புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அவர்களின் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பாடல்களைப் பாடுகின்றப் பாரம்பரியப் பாடகர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்