இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் திரிகாண்ட், ஐஎன்எஸ் சுமித்ரா மற்றும் கடல்சார் ரோந்து விமானம் டோர்னியர் ஆகியவை 13வது ‘நசீம் அல் பஹ்ர்’ பயிற்சியில் பங்கேற்றன.
இது இந்தியக் கடற்படை (IN) மற்றும் ஓமன் நாட்டுக் கடற்படை (RNO) இடையேயான இருதரப்புக் கடல்சார் பயிற்சியாகும்.
மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிற இது, துறைமுகம் சார்ந்த பயிற்சி கட்டம், கடல்சார் பயிற்சி கட்டம் மற்றும் விவாதம் சார்ந்த பயிற்சி ஆகியனவாகும்.
முதல் IN-RNO (இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் நாட்டுக் கடற்படை) பயிற்சியானது 1993 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
2022 ஆம் ஆண்டானது, IN-RNO இருதரப்புப் பயிற்சிகளின் 30 ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.