உலக சுகாதார நிறுவனம் பாம்புக் கடியினால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைத்திட ஒரு புதிய யுக்தியை வெளியிட்டு இருக்கின்றது.
விஷமுறிவு மருந்துகளின் பற்றாக்குறையானது ஒரு உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையை விரைவில் உருவாக்கும் என்று இது எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
2017 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் பாம்புக் கடியின் நஞ்சுப் பாதிப்பை ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக வரையறுத்து இருக்கின்றது.
அந்நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக தகுதியான மருந்து உற்பத்தியாளர்களில் 25 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் சிகிச்சை
பல எதிர்ப்புத் தன்மை கொண்ட பாம்பு விஷமெதிர்ப்பு ஊசியானது இந்தியாவில் பாம்புக் கடிகளுக்கான முக்கிய சிசிச்சையாகும்.
இது நான்கு பொதுவான உயிரினங்களான கண்ணாடி விரியன், சாதாரண நாகம், சாதாரண கட்டு விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய அனைத்திற்கும் எதிராக செயல்திறன் உடையதாகும்.
இந்தியாவில் இருக்கும் ஆறு மிக நஞ்சுடைய பாம்புகளாவன :