TNPSC Thervupettagam

நதி நீரோட்டங்களின் சுற்றுச்சூழல் சார் கண்காணிப்பு அமைப்பு

July 2 , 2024 16 days 99 0
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆனது நதிகளின் நிகழ்நேரத் தரக் கண்காணிப்பிற்கு வழி வகுக்கும் நதி நீரோட்டங்களின் சுற்றுச்சூழல் சார் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பல்வேறு நதிநீர் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் நதி நீரின் தரம் மற்றும் பிற முக்கிய அளவுருக்களின் கண்காணிப்பிற்கு உதவும்.
  • இது கங்கை, யமுனை மற்றும் அவற்றின் துணை நதிகளின் நீரின் தரம் பற்றிய நிகழ்நேரப் பகுப்பாய்வை வழங்குகிறது.
  • மத்திய அளவில் நமாமி கங்கைத் திட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் இது வழிவகுக்கிறது.
  • கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களின் (STPs) செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் அவற்றின் மதிப்பிடப்பட்ட திறனில் அவை செயல்படுவதை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
  • பல்வேறு இடங்களில் நதி நீரின் தரமும் கண்காணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்