TNPSC Thervupettagam

நமாமி பராக் திருவிழா

November 19 , 2017 2434 days 818 0
  • முதல் முறையாக நடத்தப் பெறும் நமாமி பராக் திருவிழாவை அஸ்ஸாமில் உள்ள சில்சார் எனும் இடத்தில் அஸ்ஸாமின் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
  • 3 நாட்கள் நடைபெறும் இத்ந நதித் திருவிழா பராக் நதி பள்ளத்தாக்கிலுள்ள ஹைலகண்டி, கரிம்கஞ்ச், சில்சார் எனும் மூன்று பகுதிகளில் நடைபெற உள்ளது.
  • பராக் நதிக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், பராக் நதியின் ஆற்றல் வளம் மற்றும் முக்கியத்துவத்தை காட்சிப்படுத்தவும், வணிகம் மற்றும் வர்த்தகத்தின் முனையமாக உருவாகிட பராக் நதிக்கு உள்ள சாத்தியங்களை காட்சிப்படுத்தவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
  • பராக் நதியானது தென் அஸ்ஸாமின் மிக முக்கிய நதிகளுள் ஒன்று. இது சுர்மா – மேக்னா நதி அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • பராக் நதி மணிப்பூரில் தோன்றி, மிசோரம், அஸ்ஸாம் வழியே பாய்ந்து வங்கதேசத்தின் உள் நுழையும் இடத்தில் சுர்மா மற்றும் குஷியாரா என இரு நதிகளாகப் பிரிகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்