நல்லாட்சி தினமானது சுஸ்ஹாசன் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் பாரத ரத்னா விருது பெற்றவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளானது நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியப் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.
அவரது முதல் பதவிக் காலமான 1996 ஆம் ஆண்டில் 13 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்தார்.
தனது இரண்டாவது பதவிக் காலத்தில், பதின்மூன்று மாத காலம் மட்டுமே அவர் பதவி வகித்தார்.
பின்னர், 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் அவர் தனது முழு பதவிக் காலத்தினையும் நிறைவு செய்தார்.