காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களாட்சி முறையின் கீழ் தற்போதைய அரசாங்கமானது அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒரு நம்பிக்கையைக் கொண்டுள்ளதா என்பதைச் சோதிப்பதற்காக இந்தத் தீர்மானமானது இயற்றப் படுகிறது.
எந்தவொரு மக்களவை உறுப்பினரும், அவையைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தினைக் கொண்டு வரலாம்.
மக்களவையின் நடைமுறை மற்றும் நடப்பு விதிகளின் 198வது விதியின் கீழ், ஒரு உறுப்பினர் இதற்கான ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பினைக் காலை 10 மணிக்கு முன் வழங்க வேண்டும்.
இந்த எழுத்துப்பூர்வத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மக்களவை சபாநாயகர் அதனை அவையில் வாசிக்கச் செய்வார்.
சபாநாயகர் தீர்மானத்தினைச் சபையில் வாசித்தவுடன், சபாநாயகர் அந்த தீர்மானம் குறித்த விவாதத்திற்கான தேதி அல்லது தேதிகளை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இந்தத் தீர்மானமானது, சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை மக்களவையில் கொண்டு வரப்படும் 28வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்.
மேலும், தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ளும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும்.
2018 ஆம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை இந்த அரசு தோற்கடித்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆனது, ஜவஹர்லால் நேரு அவர்களின் அரசுக்கு எதிராக 1963 ஆம் ஆண்டு ஆச்சார்யா J.B. கிருபாலனி அவர்களால் கொண்டு வரப்பட்டது.
இந்திரா காந்தி தனது 16 ஆண்டு கால அளவு ஆட்சியில் மொத்தம் 15 நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் தலா ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர்.
பிரதமர்கள் சரண் சிங், V.P. சிங், சந்திர சேகர், H.D. தேவகவுடா மற்றும் I.K. குஜ்ரால் இத்தகைய தீர்மானங்களை எதிர்கொள்ளவில்லை.