மாதா அமிர்தானந்தமயி தேவி நாட்டின் குடிமை-20 பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
C20 என்பது 20 நாடுகள் (G20) குழுவின் அதிகாரப் பூர்வ ஈடுபாட்டுக் குழுவாகும்.
G20 என்பது உலகளாவிய அளவில் உலகின் வளர்ச்சிப் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் நிதி உறுதித் தன்மையை நிவர்த்தி செய்வதற்கான முதன்மையான அரசுகளுக்கிடையேயான மன்றமாகும்.
C20 என்பது குடிமைச் சமூக அமைப்புகளுக்கு G20 அமைப்பின் தலைவர்களுக்கு அரசு சாராத மற்றும் வணிகம் சாராத ஆதரவுகளை வழங்குவதற்கான தளமாகும்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை ஓர் ஆண்டுக் காலத்திற்கு G20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்க உள்ளது.