2021 ஆம் ஆண்டில், 61 நாட்கள் என்ற அளவில் நாட்டிலேயே மிக நீண்ட காலச் சட்ட மன்ற கூட்டத் தொடரினைக் கேரள அரசு நடத்தியது.
2020 ஆம் ஆண்டில், ஆரம்பகட்ட கோவிட்-19 பெருந்தொற்றின் போது சட்டமன்ற அமர்வுகளைக் கூட்டுவதன் அடிப்படையிலானப் பட்டியலில் கேரளா எட்டாவது இடத்திற்குச் சென்றது.
40 நாட்கள் அளவிற்கு கூட்டத் தொடர் நடத்தியதன் மூலம், கர்நாடகா இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (34 நாட்கள்), ஒடிசா ஆகியவை உள்ளன.
28 மாநிலச் சட்டசபைகளில் 17 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தின் சட்ட சபை 20 நாட்களுக்கும் குறைவாகவே கூடியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் 10 நாட்களுக்கும் குறைவாகக் கூடியுள்ளன.