மத்தியக் கல்வி அமைச்சர் சமீபத்தில் உலகின் முதல் நுண் உணர்வி அடிப்படையில் அமைந்த சிறு அளவு வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியான (Explosive Trace Detection) “நானோ நுகர்வி” என்ற ஒரு கருவியினை (NanoSniffer) அறிமுகப் படுத்தினார்.
பம்பாய் ஐ.ஐ.டி நிறுவனத்தால் உதவி பெறும் ஒரு புத்தாக்க தொடக்க நிறுவனமான நானோஸ்னிஃப் டெக்னாலஜிஸ் (NanoSniff Technologies) என்ற ஒரு நிறுவனத்தால் இது உருவாக்கப் பட்டது.
நானோ நுகர்வியால் பத்து வினாடிகளுக்குள் வெடிபொருட்களைக் கண்டறிய முடியும்.
இதனால் அனைத்து வகையான, இராணுவம் மற்றும் தனிநபர் தயாரிக்கும் வழக்கமான வெடிபொருட்களைக் கண்டறிய முடியும்.
இதனால் நானோ கிராம் அளவு வெடிபொருட்களைக் கூட கண்டறிய முடியும்.
Explosive Trace Detection என்பது சிறிய அளவிலான வெடிபொருட்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூன்று முக்கிய பண்புகள் உணர்திறன், குறைந்த எடை மற்றும் அளவு ஆகியனவாகும்.