TNPSC Thervupettagam

நான்காவது காவல்துறை ஆணையம்

January 24 , 2022 911 days 1462 0
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நான்காவது காவல்துறை ஆணையத்தினை அமைப்பதற்கு  உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
  • அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி C.T. செல்வம், என்பவரை இக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் காவல்துறை ஆணையத்திற்கு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை தாங்க உள்ளது இதுவே முதன்முறையாக ஆகும்.
  • ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K.அலாவுதீன், ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி அதிகாரி K.ராதாகிருஷ்ணன், டாக்டர் C.ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • மூத்த இந்திய காவல்பணி அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் இந்தக் குழுவின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார்.
  • இந்தக் காவல்துறை ஆணையக் குழுவானது காவல் பணியாளர்களின் நலன் மற்றும் காவல் தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்