இந்திய கடல் பகுதியிலிருந்து முதல் முறையாக நான்கு வகையான பவளப் பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வகையான அசோசாந்தெல்லட் பவளப்பாறைகள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இவை சூசாந்தெல்லே என்ற மஞ்சள் பழுப்புநிறப் பாசியினைக் கொண்டிராத பவளப் பாறைகளின் ஒரு குழுவாகும்.
இவை சூரியனிடமிருந்து அல்லாமல், அதற்கு மாற்றாக பல்வேறு வகையான மிதவை உயிரிகளிடமிருந்து ஊட்டச் சத்தினைப் பெருமளவில் கைப்பற்றுவதன் மூலம் ஊட்டச் சத்தைப் பெறுகின்றன.