1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UNHCR நான்சென் அகதிகள் விருது ஆனது தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள், அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மற்றும் நாடற்ற மக்களைக் கௌரவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் (UNHCR), 2023 ஆம் ஆண்டிற்கான நான்சென் அகதி விருதினை அப்துல்லா மிரே என்பவருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மிரே, கென்யாவில் 100,000 புத்தகங்களை அகதிக் குழந்தைகளுக்கு வழங்கி கல்விக்கான உரிமைக்காகப் போராடிய முன்னாள் அகதியும் பத்திரிகையாளரும் ஆவார்.
கென்யாவில் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றிய அவர் ஹப் லிங்க் எனப்படும் அகதிகள் இளையோர் கல்வி மையத்தை நிறுவினார்.
இது ஒரு வெளிப்புற, அகதிகள் தலைமையிலான அமைப்பு ஆகும்.