TNPSC Thervupettagam
May 19 , 2018 2284 days 704 0
  • சுலாப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரானபிந்தேஸ்வர் பதக், நிக்கி ஆசியா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவ்விருது ஆசிய வளர்ச்சியில் இவருடைய பங்களிப்பிற்காக ஜப்பானில் வழங்கப்பட்டது.
  • இந்திய சமூக சீர்திருத்தவாதியாக கருதப்படும்பதக் நாட்டின் மிகப்பெரிய சவால்களில் இரண்டினை சரிசெய்துள்ளார். அவையாவன, தரமற்ற சுகாதாரம் மற்றும் பாரபட்சம் (Discrimination). இவ்விருது வழங்கப்பட்ட மூன்று நபர்களுள் இவர் ஒருவராவார்.

  • இவர் சுலாப் இண்டர்நேஷனல் நிறுவனத்தை 1970 ஆம் ஆண்டு நிறுவினார். இந்நிறுவனம் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் இன்னும் பிற சமூக சேவைகளை ஊக்குவிப்பதற்காக பணியாற்றும் அரசுசாரா நிறுவனம் ஆகும்.
  • இந்நிறுவனம், சுலாப் ஃபிளஷ் கம்போஸ்டிங் டாய்லெட்டுகளை இந்தியா முழுவதும் உருவாக்கி வழங்கியுள்ளது. இந்த கழிவறைகள், சிறந்த சுகாதாரம், ஊரகப் பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலிருந்து மனிதர்களுக்கு விடுதலையளித்தல் ஆகியவற்றில் மிகப்பெரும் பங்களிப்பை செய்கிறது.
  • Nikkei Inc ஆனது ஜப்பானிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனங்களுள் ஒன்றாகும். இதுவே, நிக்கி ஆசியா விருதை 1996 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இவ்விருது பின்வரும் மூன்று துறைகளில் ஆசியாவில் தங்களுடைய போற்றத்தக்க பங்களிப்பை செய்வதற்கு வழங்கப்படுகிறது.
    • பொருளாதாரம் மற்றும் வணிக புத்தாக்கம்
    • அறிவியல், தொழில்நுட்பம்
    • சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் சமுதாயம்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்