டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ‘முக்கிய மந்த்ரி கோவிட்-19 பரிவார் சஹயத்தா யோஜனா’ எனப்படும் சமூக நலப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
மேலும் கோவிட்-19 பெருந்தொற்றினால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஓர் இணைய தளத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கோவிட்-19 பெருந்தொற்றினால் தமது குடும்ப உறுப்பினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50,000 உதவித் தொகையானது வழங்கப்படும்.
மேலும் குடும்பத்திற்கான வருமானம் ஈட்டும் நபரை இழந்த குடும்பத்திற்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ.2500 தொகையானது வழங்கப்படும்.