TNPSC Thervupettagam

நிதித் தொழில்நுட்ப ஆளுமைக் குழு

November 23 , 2021 973 days 538 0
  • உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மையமாக மாறும் முயற்சியில் தமிழக அரசு நிதித் தொழில்நுட்ப ஆளுமைக் குழுவை அமைத்துள்ளது.
  • இக்குழுவானது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அமைக்கப் பட்டது.
  • இந்தக் குழுவை அமைப்பதற்கான ஒரு அறிவிப்பானது, முதலீட்டு மாநாட்டில் நிதித் தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் வெளியிடப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று கோவை நகரில் முதலீட்டு மாநாடானது நடத்தப் பட்டது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
  • சென்னையில் ஏற்கெனவே நிதித் தொழில்நுட்ப நகரை அமைக்கும் பணிகளை அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்