டியூட்சே பாங்க் இந்தியா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கௌசிக் தாஸ் 17 முக்கிய மாநிலங்களின் நிதி நலன் பற்றிய அறிக்கையினைத் தயாரித்துள்ளார்.
2024 ஆம் நிதியாண்டின் முதல் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளின் அடிப்படையில், முன்னணியில் உள்ள முதல் மூன்று மாநிலங்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகியன ஆகும்.
கடைநிலையில் உள்ள மூன்று மாநிலங்கள் மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் கேரளா ஆகியனவாகும்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை 2004 முதல் 2016 வரையிலான நிதியாண்டுகளின் முன்னணியில் இருந்தன.
2004-2016 ஆகிய காலகட்டத்தில், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடைநிலையில் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.