TNPSC Thervupettagam

நின்றபடியே செல்லக் கூடிய சக்கர நாற்காலி

November 8 , 2019 1718 days 577 0
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-M) புனர்வாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டிற்கான டிடிகே மையத்தில் (Rehabilitation Research and Device Development - R2D2) ‘Arise’ எனப்படும் ‘நின்றபடியே செல்லக் கூடிய சக்கர நாற்காலி’ ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
  • Arise ஆனது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தாவர்சந்த் கெஹ்லாட் என்பவரால் முறையாக வெளியிடப்பட்டது.
  • இந்தச் சக்கர நாற்காலியானது இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் வெல்கம் அமைப்பின் ஆதரவுடன் ஃபீனிக்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து IIT-M ஆல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • Arise ஐப் பயன்படுத்தி, ஒரு மாற்றுத் திறனாளி நபர் தனியாகவோ அல்லது மற்றவரின் உதவியுடனோ நிற்கும் நிலையில் இருந்து உட்கார்ந்த நிலைக்கும் உட்கார்ந்த நிலையிலிருந்து நிற்கும் நிலைக்கும் மாறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்