நியாய விகாஸ் இணையதளம் வழியாக நீதித்துறை உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களைச் வெகு சிறப்பாகச் வழங்கச் செய்வதற்கு வசதியாக, பயனருக்கு ஏதுவான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு இணையதளமானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
நிதி வழங்கீடு, ஆவணப்படுத்துதல், திட்டக் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவை பற்றிய தகவல்களுக்கான தடையற்ற முறையிலான ஒரு அணுகலை பெறும் வகையில் பங்குதாரர்களுக்கு அதிகாரமளிப்பதற்கு இந்த இணையதளம் உதவுகிறது.
மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான நீதிமன்றக் கூடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டமைப்பதற்காக வேண்டி பல்வேறு மாநில அரசு / ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய அரசினால் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப் படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு முறை மாநிலங்களைப் பொறுத்தமட்டில் 60:40 ஆகும்.
இது வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி சார்ந்த மாநிலங்களுக்கு 90:10 ஆகவும் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 100% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.