2009 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனையைத் தடை செய்வதற்கான ஒரு விதிமுறையினை நியூசிலாந்து அரசு ஏற்றுக் கொண்டது.
இந்தக் கட்டுப்பாடுகளானது 2023 ஆம் ஆண்டில் அமலுக்கு வர உள்ளது.
இது புகைபிடிப்பதைத் தடை செய்திட உலகின் முதல் புகையிலைச் சட்டம் ஆகும்.
2025 ஆம் ஆண்டிற்குள் "புகை இல்லாத நாடாக" மாறுவதை நியூசிலாந்து நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 6,000 ஆக உள்ள சிகரெட் சார்ந்த புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 600 ஆகக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவற்றின் அடிமையாக்கும் தன்மையைக் குறைப்பதற்காக, புகையிலை சார்ந்தத் தயாரிப்புகளில் உள்ள நிகோடின் அளவைக் குறைப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்துகிறது.
வயது வந்தோர் பிரிவில் 8 சதவீதம் பேர் மட்டுமே தினசரி அடிப்படையில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளவர்களாக இருப்பதால், நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.