TNPSC Thervupettagam

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினம் – மே 04

May 7 , 2020 1605 days 607 0
  • நிலக்கரிச் சுரங்கத்தின் மிகக் கடுமையான தொழில் மற்றும் அதில் பணியாற்றும் மக்கள் ஆகியவற்றை  எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • பூமியில் மிகப் பரவலாகக் காணப்படும் புதைபடிவ எரிபொருள் நிலக்கரி ஆகும். நிலக்கரிச் சுரங்கம் என்பது பூமியிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும்.
  • இந்தியாவில் சுரங்கத் தொழிலானது 1774 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஜான் சம்னெர் மற்றும் சுடோனியஸ் கிராண்ட் ஹெல்த்தி ஆகியோர் மேற்கு தாமோதர் நதிப் பகுதியில் மேற்கு வங்கத்தில் உள்ள ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கத்தில் வணிக ரீதியான சுரங்கத் தொழிலைத் தொடங்கினர்.
  • ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மற்றும் அதையொட்டி இருக்கும் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் ஆகியவை நிலக்கரி அதிகமுள்ள பகுதிகளாகும்.
  • பாதிக்கும் மேற்பட்ட இந்தியாவின் வணிக ரீதியிலான மின்சார ஆற்றல் தேவைகள் நிலக்கரியினால் பூர்த்தி செய்யப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்