மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி அவர்கள் நிலக்கரித் துறைக்கான அமைச்சரின் விருதை மத்திய நிலக்கரித் துறை நிறுவனத்திற்கு வழங்கினார்.
இது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd - CIL) கிளை நிறுவனமாகும். இதன் தலைமையகம்ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் அமைந்துள்ளது.
மேலும் அமைச்சர் நாட்டில் சிறந்த மற்றும் நீடித்த நிலக்கரிச் சுரங்கத்தை ஊக்குவித்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட இதே விருதினை CIL நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுக்கு வழங்கினார்.
வடக்கு நிலக்கரி நிறுவனமானது நிலக்கரி உற்பத்தியில் தனது தலைசிறந்த செயல்பாட்டிற்காக இந்த விருதைப் பெற்றுள்ள அதே சமயம் தென் நிலக்கரி நிறுவனமானது நீடித்த சுரங்கத்திற்காக இந்த விருதைப் பெற்றுள்ளது.