வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கு நிலையான மேம்பாட்டு இலக்கு முன்னேற்ற விருதானது (SDG Progress Award) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவு பெற்ற நிலையான மேம்பாட்டுத் தீர்வு கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.
வறுமையை ஒழிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயல் பட்டதிலும், கிரகத்தைப் பாதுகாத்தல் மற்றும் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்தல் ஆகியவற்றிலும் சிறப்பாகச் செயலாற்றி வரும் வங்காள தேசத்தின் நிலையான போக்கிற்காக இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டது.
குறிப்பு
9வது வருடாந்திர நிலையான மேம்பாட்டு மாநாடானது செப்டம்பர் 20 அன்று நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வின்போது, ‘இந்த நாளின் மகுடத்தில் ஓர் அணிகலன்’ (jewel in the crown of the day) என்று ஷேக் ஹசீனா அறிமுகப்படுத்தப்பட்டார்.