முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) ஆனது 'நிவேஷக் சாரதி' என்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு வாகனங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, 'அறிவின்மையிலிருந்து விடுபட்டு நிதிசார் சுதந்திரத்தினைப் பெறுதல்' என்ற கருத்துருவுடன் ஒன்றிணைக்கப் பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு வாகனங்களில் 'ஹிசாப் கி கிதாப்' நிகழ்ச்சியை ஒளிபரப்பும் வகையில் தொலைக்காட்சித் திரை பொருத்தப் பட்டுள்ளது.
இது முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட முதலீட்டாளர் விழிப்புணர்வுத் திரைப்படங்களின் தொடர் ஆகும்.
முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையமானது, முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை மேலாண்மை செய்வதற்காக பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.