TNPSC Thervupettagam

நீடித்த உயிரி எரிபொருள் மீதான சர்வதேச கருத்தரங்கு 2018

March 1 , 2018 2334 days 665 0
  • புதுதில்லியில் நீடித்த உயிரி எரிபொருள் (Biofuel) மீதான இரு நாள் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
  • மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உயிர் எதிர்கால மேடை (Bio Future Platform) அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து இக்கருத்தரங்கை நடத்தியுள்ளன.
  • நவீன உயிரி எரிபொருட்களை மேம்படுத்துவதற்கும், வணிகமயப்படுத்துவதற்கும் (Commercialization) உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  உயிரி எரிபொருள் துறைசார் நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை இந்தியாவில் “புத்தாக்கத் திட்டத்தின்” (Mission Innovation – MI) செயல்பாடுகளை வழிநடத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் முதன்மை நிறுவனமாகும்.
  • புதுதில்லியில் உள்ள மரபுப்பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலுக்கான சர்வதேச மையத்தில் (ICGEB – International Center For Genetic Engineering and Biotechnology) உயிரி தொழில்நுட்பத்துறையால் 2014 ஆம் ஆண்டு “புத்தாக்க  இந்தியா  திட்டத்திற்கான” நிறுவன அமைப்புகள்  அமைக்கப்பட்டன.
  • நவீன உயிரி எரிபொருள் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் குறைந்த விலையிலான புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு  ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்