TNPSC Thervupettagam

நீடித்த மீட்பு குறித்த சிறப்பு அறிக்கை

September 25 , 2020 1394 days 650 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தில் சர்வதேச ஆற்றல் முகமையானது (IEA - International Energy Agency) நிதி ஆயோக்குடன் இணைந்து “நீடித்த மீட்பு குறித்த ஒரு சிறப்பு அறிக்கையைவெளியிட்டுள்ளது.
  • இது IEA-ன் முதன்மைத் தொடரான உலக ஆற்றல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • இது ஆற்றல் அமைப்புகளை தூய்மையானதாகவும் தாங்கும் திறனுள்ளதாகவும் ஏற்படுத்தும் அதே வேளையில் அடுத்த 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெறச் செய்வதற்காகவும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் அதிக எண்ணிக்கையிலான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றது.
  • சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த, வேலைவாய்ப்பை ஏற்படுத்த, உமிழ்வுகளைக் குறைக்க உதவும் ஆற்றல் தொடர்பான முதலீடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்