TNPSC Thervupettagam

நீதிபதி ரோகிணி குழுவின் ஆய்வறிக்கை

August 13 , 2023 344 days 243 0
  • நீதிபதி G. ரோகினி தலைமையிலான ஆணையம் ஆனது 2017 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) குழுக்களின் துணை வகையாக்கம் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது.
  • இது அரசியலமைப்பின் 340வது சட்டப்பிரிவு வழங்கிய அதிகாரங்களின் கீழ் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டது.
  • இந்த ஆணையம் கண்டறிந்த சில முக்கியத் தகவல்கள்:
    • சில சாதிக் குழுக்களின் ஆதிக்கம்: ஒட்டு மொத்த இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக் குழுக்களிலும் சில குறிப்பிட்ட சாதிக் குழுக்கள் இதரப் பிற்படுத்தப் பட்டோர் வகுப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கீட்டினைப் பெறுவது கண்டறியப் பட்டது.
    • சமநிலைப் பங்கீடு: சில குழுக்கள் அதிக ஒதுக்கீட்டினைப் பெறுவதால் ஏற்படும் ஒரு ஏற்றத் தாழ்வை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இதரப் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பு சமூகத்தினரிடையே சமமான முறையில் இந்தப் பலன்கள் சென்று அடைவதை உறுதி செய்வதற்கான தேவை கண்டறியப் பட்டது.
    • இடஒதுக்கீடு வழங்கீட்டிற்கான சூத்திரம்: வரலாற்று ரீதியாக விளிம்பு நிலையில் உள்ள குழுக்களுக்கு அதிகப் பங்கை வழங்குதல் மற்றும் இட ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கீட்டினைப் பெறும் குழுக்களின் பங்கைக் குறைத்தல் போன்ற நோக்கத்துடன், இத்தனை ஆண்டுகளாக அவர்கள் குறைவான பிரதிநிதித்துவத்தினைப் பெற்று வருவதை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டுப் பலன்களை ஒதுக்கீடு செய்திட வேண்டி அதற்கான சூத்திரத்தை ஆணையம் வகுத்துள்ளது.
    • மத்திய அரசின் இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புப் பட்டியலை மறுசீரமைத்தல்: உள்ளீடுகளில் உள்ள பிழைகள் மற்றும் தவறுகளைச் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புப் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகளில் திருத்தங்கள் மற்றும் மாற்றீடுகளை மேற்கொள்வதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்