தமது விருப்பத்தினைத் தெரிவிக்கும் அனைத்து நீதிமன்ற அமர்வுகளின் வழக்காடுதல்களின் நேரடி ஒளிபரப்பினை ஜூலை 17 முதல் தொடங்க உள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்காடுதல்களை காணொலி வாயிலாக பொது மக்களைப் பார்வையிட அனுமதித்த நாட்டின் முதல் உயர்நீதிமன்றமாக இது உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பாக 2020 ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த உயர்நீதிமன்றமானது தலைமை நீதிபதி தலைமையிலான நீதிமன்ற வழக்காடுதல்களைப் பொதுமக்கள் பார்வைக்காக யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது.