நீல நிற வயிருடைய குக்ரி (பனையன்) வகை பாம்பானது (ஒலிகோடன் மெலனியஸ் வால்) மனாஸ் தேசியப் பூங்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒலிகோடன் மெலனியஸ் வகை பாம்பானது 112 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப் பட்டுள்ளது.
இது கடைசியாக 1908 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில், மனாஸிற்கு மேற்கே 267 கிமீ தொலைவில் உள்ள திண்டாரியா என்ற பகுதியில் இருந்து கண்டறியப் பட்டது.
இது கிழக்கு இந்தியப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது.
1909 ஆம் ஆண்டில் ஃபிராங்க் வால் என்பவரால் டின்டாரியா, டார்ஜிலிங் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகளின் அடிப்படையில் இந்த இனங்கள் குறித்து விவரிக்கப்பட்டது.