2023 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நூற்று இருபத்தி எட்டாவது திருத்தம்) மசோதாவானது, மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னரே இது செயல்படுத்தப் படும்.
அடுத்த தொகுதி மறுசீரமைப்பு அல்லது தொகுதி எல்லைகளை மறுவடிவமைப்பு செய்யும் நடவடிக்கையானது 2026 ஆம் ஆண்டில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவானது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தினால் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மக்களவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப் பட்டது.
கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டு குழுவின் மதிப்பீட்டிற்காக இது பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 950 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்கள் ஆவர், ஆனால் பாராளுமன்றத்தில் 15% மற்றும் மாநில சட்டமன்றங்களில் 10% மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.