TNPSC Thervupettagam

நூலகங்களின் நண்பர்கள் திட்டம்

December 21 , 2022 579 days 499 0
  • தமிழக அரசானது, வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் ‘நூலகங்களின் நண்பர்கள்’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நூலகங்களுக்குச் செல்ல முடியாத நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் படி, நூலகத்திற்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள் உள்ளிட்டோர் இந்த முன்னெடுப்பின் மூலம் பயனடைவார்கள்.
  • இதற்காக தன்னார்வலர்களின் சேவைகளும் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ஒரு அறிவு சார்ந்தச் சமூகத்தை மேம்படுத்தச் செய்வதே இத்தகைய முன்னெடுப்பின் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்