TNPSC Thervupettagam

நெகிழிக் கழிவு உற்பத்தியானது உலகக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தினம் - 2023 அறிக்கை

August 4 , 2023 351 days 235 0
  • இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 68,642,999 டன் நெகிழிக் கழிவுகள் இயற்கை வாழிடங்களில் வீசப் படும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • உலகிலுள்ள முறையாக கையாளப்படாத 52 சதவீதக் கழிவுகளுக்குக் காரணமான 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • ஒரு நபருக்கான வருடாந்திர நுகர்வு 128.9 கிலோ என்ற அளவுடன் உலகிலேயே அதிக அளவில் நெகிழிக் கழிவுகளை உண்டாக்கும் நாடாக ஐஸ்லாந்து உள்ளது.
  • இது இந்தியாவில் பதிவாகியுள்ள ஒரு நபருக்கான வருடாந்திர நுகர்வான 5.3 கிலோ என்ற அளவை விட 24.3 மடங்கு அதிகம் ஆகும்.
  • உலகளவில் ஓர் ஆண்டில் ஒரு நபரின் சராசரி நெகிழி நுகர்வு 20.9 கிலோ ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 159 மில்லியன் டன் நெகிழிகள் (குறுகியக் காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியவை) உற்பத்தி செய்யப்படும்.
  • இவற்றில் 43 சதவீதமானது (68.5 மில்லியன் டன்கள்) மாசினை ஏற்படுத்தச் செய்வதாக அமையும்.
  • ஆண்டுதோறும் வணிகப் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் மொத்த நெகிழிப் பொருட்களில் சுமார் 37 சதவிகிதம் குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகள் ஆகும்.
  • முறையாகக் கையாளப்படாத நெகிழிக் கழிவுகளை அதிகளவில் கொண்ட மூன்று நாடுகள் மொசாம்பிக் (99.8 சதவீதம்), நைஜீரியா (99.44 சதவீதம்) மற்றும் கென்யா (98.9 சதவீதம்) ஆகியனவாகும்.
  • இந்தியாவில் 98.55 சதவீதக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாத நிலையில் இந்தக் குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா ஆண்டுதோறும் சுமார் 14.2 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகளைச் செயல் முறையாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்