TNPSC Thervupettagam

நெகிழிக்காக அரிசி

November 7 , 2019 1718 days 615 0
  • பிலிப்பைன்ஸ் நாட்டின்  தலைநகரான மணிலாவிற்கு அருகே உள்ள பேயானன் என்ற பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் நெகிழிக் குப்பைகளை ஒப்படைத்து அதற்குப் பதிலாக அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • கடலில் நெகிழி மாசுவை ஏற்படுத்தும் முன்னணி நாடுகளில் பிலிப்பைன்ஸ் நாடும் ஒன்றாகும்.
  • நெகிழிக் கழிவுகளில் பாதிக்கும் மேலானது சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஐந்து நாடுகளிலிருந்துப் பெறப் படுகின்றது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப் படுன்றன.
  • இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப் பட்டுள்ளன. இன்று, மறுசுழற்சிக்காக வெறும் 14% பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்