நெகிழிப் பயன்பாடு இல்லாத மைசூர் அரண்மனை
August 25 , 2023
330 days
197
- வரலாற்றுச் சின்னமான மைசூரு அரண்மனை விரைவில் நெகிழிப் பயன்பாடு இல்லாத அரண்மனையாக மாற உள்ளது.
- மைசூரு உயிரியல் பூங்காவிற்கு அடுத்தப் படியாக நெகிழி இல்லாத இரண்டாவது சுற்றுலாத் தலமாக இது அமைய உள்ளது.
- இந்த கருத்தாக்கமானது மைசூர் உயிரியல் பூங்காவில் சிறந்த முறையில் செயலாக்கப் பட்டது.
- பார்வையாளர்கள் இந்த உயிரியல் பூங்காவிற்குள் நெகிழிக் குடுவைகளை எடுத்துச் செல்வதற்கு ஒரு குடுவைக்கு 20 ரூபாய் வைப்பு வைத்து உள் நுழைய வேண்டும்.
- அதைச் சுற்றிப் பார்த்து திரும்பும் போது, அவர்கள் குடுவையைத் திருப்பி தந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/25-730.jpg)
Post Views:
197