நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளைத் தொடங்கும் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ பெற உள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிடப் பட்டு உள்ளது.
இதற்கு முன்னர் எந்தவொரு மேம்பாடும் இல்லாத பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம் ஆனது, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ஜேவார் பகுதியில் டெல்லியில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இது இரண்டாவது சர்வதேச மற்றும் ஒட்டு மொத்தச் செயல்பாட்டிற்கான வணிக விமான நிலையமாகவும், தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) அமைந்த மூன்றாவது விமான நிலையமாகவும் இருக்கும்.