மேற்கு வங்காள அரசானது 2019 ஆண்டின் காரீஃப் பருவத்திற்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து அறிவித்துள்ளது.
பங்களா ஷஷ்யா பீமா என்றழைக்கப்படும் இந்தத் திட்டமானது 15 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பொருந்தும்.
முழு காப்பீட்டுத் தொகையையும் அரசே செலுத்துவதால் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டமானது விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாகும்.
அமன் நெல், அவுஸ் நெல், சணல் மற்றும் சோளம் ஆகியவை இந்தக் காப்பீட்டின் கீழ் வரும் பயிர்களாகும்.
நடவு செய்யும் செய்யும் போதும், சாகுபடியின் போதும், அறுவடை செய்த பின்னர் பயிர் வயலில் இருக்கும் போதும், மோசமான வானிலை சூழ்நிலைகளின் போதும் என 4 நிலைகளில் இந்தக் காப்பீடானது அளிக்கப்படும்.