மத்திய அரசானது 2022 ஆம் ஆண்டின் பசுமை ஆற்றல் தடையற்ற அணுகல் விதிகளை அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை இது துரிதப்படுத்தும்.
கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் உள்ளிட்ட பசுமை ஆற்றலின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பசுமை மின்சாரத்திற்கான தடையற்ற அணுகலுக்கான ஒரு எளிமையான நடைமுறையையும் இந்த விதிகள் செயல்படுத்துகின்றன.