TNPSC Thervupettagam

பசுமை காலநிலை நிதியம்

August 9 , 2017 2535 days 1105 0
மகாராஷ்டிரா
  • மகாராஷ்டிரா மாநிலம் , பசுமை காலநிலை நிதியம் மூலமாக 270 மில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்கு 2030 நீர் வளக் குழு (2030 Water Resources Group , 2030WRG) உதவவுள்ளது.
  • ஜல்யுக்த் சிவார் திட்டம் (Jalyukt Shivar Yojana) போன்ற ஒருங்கிணைந்த நீர்நிலைத் திட்டங்களில் முதலீடு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.
  • வேளாண் வளர்ச்சி மற்றும் வருவாய் மேம்பாடு ஆகியவற்றுடன், பாசனப் பகுதிகளில் நீர் பயன்பாட்டு திறன்களை மேம்படுத்தும் திட்டங்களை துரிதப்படுத்தவும் இந்தத் திட்டம் முனைகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி மூலம் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • பசுமை காலநிலை நிதியமானது, ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின் (UN Framework Convention on Climate Change) கொள்கைகள் மற்றும் விதிகளின் படி செயல்படுவதற்கு உருவாக்கப்பட்ட நிதி ஆகும் .
  • 2030 நீர் வளக் குழு (2030 Water Resources Group - 2030WRG) என்பது சர்வதேச நிதி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. மேலும் இது வளரும் நாடுகளில் நீர்நிலைகளை மேம்படுத்தும் அரசு – தனியார்- சிவில் சமூகத்தின் கூட்டு முயற்சி ஆகும்.
  • நீர் வளங்களை உபயோகிப்பதில் ஒத்துழைப்பையும், சீர்திருத்தங்களையும் 2030 ஆம் ஆண்டுக்குள் கொண்டு வருவது இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்