பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்புகள் என்பது குறித்த ஒரு இரண்டு நாள் உச்சி மாநாட்டினை இந்தியா நடத்தியது.
இந்த உச்சி மாநாட்டில் BRICS நாடுகள் பங்கேற்றன.
இந்த சிறப்புமிக்க ஒரு மாநாடானது அந்தந்த நாடுகளின் பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்புகள் பற்றியும் அதனை எவ்வாறு அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்ற கருத்துகள் பற்றியும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாகும்.
இந்த இணையதள நிகழ்வானது இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமும் உலகளாவிய ஆற்றல் நிறுவனமுமான NTPC நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
பசுமை ஹைட்ரஜனானது முழுவதுமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலிருந்து பெறப் படுகிறது.