சமீபத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) 2023 ஆம் ஆண்டிற்கான ‘பசுமைக் கடன் திட்டம் (GCP)’ நடைமுறை விதிகளை அறிவித்து உள்ளது.
தனிநபர்கள், தொழில்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs), நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB), கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவை ஒன்றிணைந்து மரங்கள் நடுதல், நீர் சேமிப்பு, கழிவுகள் போன்ற பல சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதை ஊக்குவிக்கச் செய்வதுடன் கழிவு மேலாண்மை, மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்களாக முன்மொழியப்பட்டு உள்ளன.
இந்த பல நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம், நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக் கூடிய "பசுமை வரவுகளை" சம்பாதிக்கலாம் என்பதோடு, சந்தை அடிப்படையிலானப் பொறிமுறையின் மூலம் அவை ஊக்குவிக்கப் படும்.