பஞ்சாப் மாநிலச் சட்டசபையானது 2023 ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறை (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கும், நியமனம் செய்வதற்குமான ஒரு சுயாதீனமான நெறிமுறையை அறிமுகம் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அந்தச் செயல்முறையை "அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடுகளிலிருந்து விடுபடச் செய்யும்".
2019 ஆம் ஆண்டில், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட இதே போன்றச் சட்டங்களின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.