மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 'நடப்பதற்கான ஒரு உரிமையை' அமல் படுத்துவதில் பஞ்சாப் மாநிலம் முன்னணியில் உள்ளது.
எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள சாலைகள் விரிவாக்கம் மற்றும் புதிய சாலைகள் அமைப்புப் பணிகளின் போது நடைபாதை மற்றும் சைக்கிள்களுக்காக என்று வழித் தடங்களை நிறுவச் செய்வதை இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உள்பட அனைத்துச் சாலை நிர்வாக நிறுவனங்களுக்கும் அரசு கட்டாயமாக்குகிறது.
இது பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மத்தியில் ஏற்படும் பெரும் சாலை விபத்துக்கள் தொடர்பான இறப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இம்மாதிரியான உரிமையினை வழங்கும் முதல் மாநிலம் பஞ்சாப் ஆகும்.