கிராமப் புறங்களில் நில வங்கிகளை உருவாக்கும் நோக்கத்துடன், கிராமப் புறங்களில் உள்ள பொது நிலங்களை மாநில தொழில் துறைக்கு மாற்றுவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பஞ்சாப் அமைச்சரவை கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்தத் திருத்தமானது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ‘ஷாம்லத்’ அல்லது கிராமப் பொது நிலத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவ இருக்கின்றது.