பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 01 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்.
மாதந்தோறும் 200 யூனிட் வழங்கப் பட்டு வந்த பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு இனி மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.